அடுத்தவாரத்தில் மழை!!

8 சித்திரை 2025 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 1822
இந்த வாரம் நிலவிய கடுமையான வெப்பத்தை அடுத்து, அடுத்து வரும் நாட்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் நிலவுவது போன்ற வெப்பம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் பதிவாகியிருந்தது. அதை அடுத்து, இவ்வார ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும்.
அதேவேளை, வேகமான காற்று வீசவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடி மின்னல் தாக்குதல்களும் பதிவாகும் எனவும், சீரற்ற காலநிலை ஒருவாரத்துக்கு நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.