வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
12 சித்திரை 2025 சனி 10:56 | பார்வைகள் : 2851
தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்'. சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால் சூர்யா, வெற்றிமாறன் இருவரும் அவர்களின் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் தள்ளிப்போனது.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் தொழில்நுட்ப காட்சிகள் சம்மந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தை ஜூன் மாதத்தில் துவங்குவதாக தாணு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதன் படப்பிடிப்பை தற்போது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அன்று தொடங்குவதாக வெற்றிமாறன் தாணுவிடம் தெரிவித்துள்ளார் என்கிறார்கள். காரணம் படத்தின் திரைக்கதை பணிகள் இன்னும் முடியாததால் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.


























Bons Plans
Annuaire
Scan