சாலை கண்காணிப்புகள்- 2 - எந்தவொரு குறிப்பிட்ட காரணம் இல்லாமல் சோதிக்கலாமா?

13 வைகாசி 2025 செவ்வாய் 05:00 | பார்வைகள் : 685
ஒவ்வொரு வாகன ஓட்டுனரும் காவல்துறையினரால் எந்தக் கணத்திலும் சோதிக்கப்படலாம். சாலையில் பயணிக்கும் போது நடைபெறும் இந்தச் சோதனையை 'சாலை கண்காணிப்பு' (contrôle routier) என்கிறோம்.
இது ஒரு குற்றச்செயல் நிகழ்ந்ததைத் தொடர்ந்தும் இருக்கலாம்.
அல்லது எந்தவொரு காரணமும் இல்லாமல் கூட இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சாதாரண அடையாள சோதனை ஆகக் கூட இருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அவர்கள் கேட்ட ஆவணங்களை வழங்க தயாராக இருக்க வேண்டும். காவற்துறையினர் வாகனத்தின் சாரதியிடம் கேட்கும் ஆவணங்களை வழங்கியே ஆகவேண்டும்.
அதனை மறுப்பது குற்றச் செயல் என்பதால், கைது செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்படலாம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து வாகனச்சாரதிப் பத்திரம் குறிப்பிட்ட காலத்திற்கு இரத்துச் செய்யவும்படலாம்.
காவற்துறையினரின் ஆணையை மதித்தல் அவசியம்
எனவும் சட்டத்தரணி வலியுறுத்தி உள்ளார்.