Paristamil Navigation Paristamil advert login

ரஸ்யாவிற்கு யுத்தநிறுத்த்தில் விருப்பமில்லை -எமபனுவல் மக்ரோன்!!

ரஸ்யாவிற்கு யுத்தநிறுத்த்தில் விருப்பமில்லை  -எமபனுவல் மக்ரோன்!!

16 வைகாசி 2025 வெள்ளி 17:10 | பார்வைகள் : 12887


கடந்த வாரம் மிக் கடுமையான தொனியில் ரஸ்யா தற்காலிக யுத்தநிறுதத்தை ஏறபடுத்த விரும்பவில்லை என திட்டவட்டமாக விளங்குகின்றது என பரிரானசின் ஜனாதிபதி எதானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அல்பேனியாவின் திரானா நகரத்தில் நடைபெறும் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்,

«கடந்த சில மணி நேரங்களின் நிகழ்வுகள், ரசியாவிற்கு தற்காலிக போர்நிறுத்தம் வேண்டுமென்ற ஆசை இல்லையென்பதை காட்டுகின்றன' என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த வாரம் கீவ் நகரில் சந்தித்த ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளின் தன்னார்வக்குழு குறித்து அவர்,

«இந்த கூட்டணி தற்காலிக போர்நிறுத்தத்தைப் பெறுவதற்காக முக்கியமான நாடுகளின்  ஒன்றிணைந்த  கூட்டணியாகும்« எனக் கூறினார்.

«உக்ரைனுக்காக ஐரோப்பாவின் ஒற்றுமை அவசியம்என அவர் உக்ரைன் ஜனாதிபதியுடன் நின்றபோது உறுதியாக தெரிவித்தார்»

ஆனால் இன்று துருக்கியில் இஸ்தான்புல்லில் ஒருங்கு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக்கு விளாதிமிர் புட்டின் செல்லவில்லை என்பதால் மேற்கண்ட கருத்தை எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்