குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ... ஒருவர் பலி.. பலர் காயம்!!

22 வைகாசி 2025 வியாழன் 17:40 | பார்வைகள் : 3058
பரிசின் மேற்கு புறநகரான Boulogne-Billancourt இல் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டுளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மே 22, இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue du Vieux Pont de Sèvres வீதியில் உள்ள 15 அடுக்கள் கொண்ட கட்டிடம் ஒன்றின் 12 ஆவது தளத்தில் திடீரென தீ பரவியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
80 வரையான தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.
தீயில் சிக்கி நபர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தீ பரவியமைக்குரிய காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1