Paristamil Navigation Paristamil advert login

யூத தேவாலயத்தை உடைத்து உள்நுழைய முற்பட்ட ஒருவர் கைது!!

யூத தேவாலயத்தை உடைத்து உள்நுழைய முற்பட்ட ஒருவர் கைது!!

30 சித்திரை 2025 புதன் 15:20 | பார்வைகள் : 343


யூதர்களின் தேவாலயம் ஒன்றை உடைக முற்பட்ட ஒருவர் நேற்று ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

லியோன் மாவட்டத்தில் உள்ள Caluire-et-Cuire synagogue தேவாலயத்தில் இருந்து இரவு 2 மணி அளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். தேவாலயத்தின் கதவினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த  நிலையில் ஒருவர்  இருப்பதை பார்த்துள்ளனர்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்ட (OQTF) அகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் மத தலங்கள் தொடர்பில் பல்வேறு நிகழ்வுகள் பதிவாகிவருகிறமை அறிந்ததே.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்