ஆர்சலோர் மிட்டல் பணியாளர்களுடன் இடது சாரிகள்!!

1 வைகாசி 2025 வியாழன் 12:53 | பார்வைகள் : 325
இன்றைய மேதினப் பேரணியில் இடது சாரிகள், ஆர்சலோர் மிட்டல் பணியாளர்களுடன் இணைந்து ஊர்வலம் செய்துள்ளனர்.
டங்கேர்க்கில் (Dunkerque - Nord) இலுள்ள ஆர்சலோர் மிட்டல் நிறுவனம் 600 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்திருந்தது. அன்றிலிருந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிற்கு துணை நிற்கும் வகையில், இந்தப் பணியாளர்களுடன் இணைந்து, டங்கேர்க்கில் இடதுசாரிகள் அணியிலுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் மே தின ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிபெற தாங்கள் துணை நிற்போம் என இடதுசாரிகள் உறுதியளித்துள்ளனர்.