ரஸ்யாவின் சிறையிலிருந்து காப்பாற்றிய எல்லைகளற்ற ஊடகவியலாளர்!!

5 வைகாசி 2025 திங்கள் 20:41 | பார்வைகள் : 562
ரஸ்யாவில் தேடப்பட்டு வநத ஊடகவியலாளர் எலக்தரினா பார்பாக் (Ekaterina Barabach) இனை பிரான்சின் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பான Reporters sans frontières பிரான்சிற்கு மீட்டு வந்துள்ளது.
இவர் உக்கைரன் மீதான ரஸ்யாவின் போரை மிகவும் மோசமாக விமர்சித்தமைக்காக இவரைத் தேடி வந்துள்ளது. இவரிற்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனை காத்திருந்தது. இவர் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்பட்டுள்ளதாக மொஸ்கோ அறிவித்திருந்தது.
இவர் தேடப்படும் போது, மறைந்து வாழ்ந்துள்ளார். இவரை அங்கிருந்து மீட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு பிரான்சிற்குக் கொண்டு வந்துள்ளது.
இதனை இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அரச சார்பற்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதில் தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தார் 64 வயதுடைய எலக்தரினா பார்பாக்.
எலக்தரினா பார்பாக் ரஸ்யாவில் கார்க்கிவ் என்ற ஊரில் பிறந்தவர். அந்தப் பகுதி தற்போதைய உக்ரெய்னில் உள்ளது.