Val-de-Marne : 15 வயதுச் சிறுவன் மீது வாள் வெட்டு!!

5 வைகாசி 2025 திங்கள் 22:20 | பார்வைகள் : 3576
நீளமான வாள் ஒன்றினால் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளார்.
Valenton (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மே 4, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவனை சூழ்ந்துகொண்ட குழு ஒன்று அவனை சரமாரியாக தாக்கியுள்ளது. 'நீண்ட வாள்' ஒன்றினால் அவன் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளர்.
மாலை 6.30 மணி அளவில் Rue Julien-Duranton வீதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.