பிரான்சில் பாதுகாப்பான இடங்களே இல்லை - மக்கள் கருத்துக் கணிப்பு!!

8 வைகாசி 2025 வியாழன் 19:51 | பார்வைகள் : 774
பிரான்சின் நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன், ஒரு செவ்வியில் பிரான்சில் எங்கும் ஆபத்து உள்ளது.
பாதுகாப்பான இடம் என்று ஒன்றும் இல்லை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அது அரசியல் தளத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இதனையடுத்து CNEWS,Europe 1,JDD ஆகிய ஊடகங்களிற்காக CSA ஒரு கருத்துக் கணிப்பைச் செய்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் 70 சதவீத மக்கள் ஜெராலட் தர்மனனன் கருத்தைப் போலவே, பிரான்சில் பாதுகாப்பான இடமே இல்லை என, கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வெறும் 30 சதவீதமானவர்களே பாதுகாப்பாக உணர்ந்துள்ளனர்.