தீவிரம் அடையும் போர் - இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்

8 வைகாசி 2025 வியாழன் 19:23 | பார்வைகள் : 1046
ஜம்மு நகரை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் இன்றிரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
உதாம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.