அரபிக் கடலில் இந்திய கடற்படை தாக்குதல் தொடக்கம் - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி
9 வைகாசி 2025 வெள்ளி 03:28 | பார்வைகள் : 6609
இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்துள்ளதால், அரபிக் கடலில் இந்திய கடற்படை அதன் தாக்குதலை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் மீண்டும் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு ஜம்மு, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நோக்கி ஏவியதையடுத்து, இந்திய கடற்படை அரபிக் கடலில் பதிலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கிய இந்த நடவடிக்கைகள், பாகிஸ்தானின் பல இலக்குகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை ஜம்முவில் பல வெடிப்புகள் கேட்கப்பட்டன. பின்னர் பாகிஸ்தான் ஜம்மு, ஆர்னியா, ஆர்.எஸ்.புரா, ஹீரானகர் உள்ளிட்ட இடங்களை நோக்கி ஏவுகணைகள் தாக்கியிருப்பது தெரியவந்தது. ஆனால் அனைத்தும் இந்தியாவின் ஏரியல் பாதுகாப்பு அமைப்பால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
ஜெய்சல்மேர், பத்தான்கோட், உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ட்ரோன்கள் தாக்க முயற்சிக்கப்பட்டன. சந்தேகத்திற்கிடமான இயக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே மின்தடை நடவடிக்கைகள் ஸ்ரீநகர், மோகாலி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் அமுல்படுத்தப்பட்டது.
“இன்று பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஜம்மு, பத்தான்கோட், உதம்பூர் ஆகிய ராணுவ நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்க முயன்றன. அனைத்தும் SOP-க்களுக்குட்பட்டு தடுக்கப்பட்டன. எந்த உயிரிழப்பும், சேதமும் ஏற்படவில்லை.”
ஆபரேஷன் சிந்தூர் கடந்த புதன்கிழமையன்று துவங்கி, பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-எ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-எ-மொஹம்மத் தலைமையகங்களை அடைத்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் பல்வேறு நகரங்களில் தாக்க முயன்றது.
வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் தான் முதலில் பதற்றத்தை உருவாக்கியது. இந்தியாவின் நடவடிக்கைகள் திட்டமிட்ட, கட்டுப்பாடுடையவை. மேலும் எதுவும் ஏற்பட்டால், அதற்கும் சீரான பதில் வழங்கப்படும்,” என கூறியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan