Paristamil Navigation Paristamil advert login

டொனால்ட் டிரம்ப் உடன் மோதல் - புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்….?

டொனால்ட்  டிரம்ப் உடன் மோதல் - புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்….?

6 ஆனி 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 501


டிரம்ப் உடன் ஏற்பட்ட மோதலையடுத்து எலான் மஸ்க் தனி கட்சி தொடங்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்பை ஆதரித்து எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வந்ததோடு, பல கோடிகளை நன்கொடையாக வாரி வழங்கினார்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று, 2வது முறையாக அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், அரசு நிர்வாகத்தின் செலவுகளைக் குறைப்பதற்கு, அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதன் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை நியமித்தார்.

இந்நிலையில், டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்த எலான் மஸ்க், DOGE துரையின் பதவிக்காலம் முடிவடைந்ததாக கூறி அதில் இருந்து விலகினார்.
தற்போது, இருவருக்குமிடையேயான மோதல் அதிகரித்துள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன், அமெரிக்க அரசு பெரியளவிலான ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், அதை நிறுத்தப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

தற்போது, டிரம்ப் ஒரு நன்றி கெட்டவர். நான் இல்லையென்றால் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 80% அமெரிக்கா மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கட்சி தொடங்கும் நேரம் இதுவா? என எக்ஸ் தளத்தில் டிரம்ப் ஒரு கருத்துக்கணிப்பை தொடங்கியுள்ளார்.

இந்த கருத்து கணிப்பில் 47 லட்சத்திற்கு அதிகமானோர் வாக்களித்துள்ள நிலையில், 80% பேர் புதிய கட்சி தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எலான் மஸ்க் அரசியல் கட்சி தொடங்குகிறாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்