Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் இரு பேரப்பிள்ளைகளை பலிகொடுத்த பாட்டி.. பிரான்சில் வழக்கு பதிவு!!

காஸாவில் இரு பேரப்பிள்ளைகளை பலிகொடுத்த பாட்டி.. பிரான்சில் வழக்கு பதிவு!!

7 ஆனி 2025 சனி 18:53 | பார்வைகள் : 512


காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையின் போது இரு பேரப்பிள்ளைகளை பலிகொடுத்தபாட்டி ஒருவர் பிரான்சில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Vitry-sur-Seine wஅகரில் வசிக்கும் பெண்மணி ஒருவர், அவரது 6 வயது பேரன் 9 வயது பேத்தி ஆகிய இருவரையும் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இரவு இழந்திருந்தார். அவர்களது வீட்டின் மீது விழுந்த குண்டு வெடித்துச் சிதறியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது பெற்றோர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்து பின்னர் பிரான்சுக்கு திரும்பியிருந்தனர்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக பிரான்சில் இருந்து காஸாவுக்குச் சென்றிருந்த அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதை அடுத்து அவர் பிரான்சில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெயர்களை குறிப்பிடாமல், இஸ்ரேலிய அதிகாரிகளே இந்த இனப்படுகொலைக்கு காரணம் என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்