கொழும்பை சேர்ந்த நால்வர் நீரில் மூழ்கி பலி

8 ஆனி 2025 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 856
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில் இவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை