அரசாங்கத்தை கலைத்தது தவறென உணர்ந்த ஜனாதிபதி மக்ரோன்..!!

8 ஆனி 2025 ஞாயிறு 19:13 | பார்வைகள் : 1213
சென்ற வருடம் ஜூன் 9 ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அரசாங்கத்தை கலைப்பதாக அறிவித்தார்.
ஒருவருடம் கழித்து அது தவறென உணர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. RN மற்றும் NFP கூட்டணி அதிக ஆசனங்களைப் பெற்று ஜனாதிபதியின் மக்ரோனின் கட்சி மூன்றாவது பெரும்பான்மையை பெற்றது. இதனால் அடுத்தடுத்து பல சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மக்ரோன் அதனை தவறென உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 'அரசாங்கத்தைக் கலைப்பதற்கு முன்னர் அது சிறப்பாக அமைந்திருந்தது!' என மக்ரோன் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.