Paristamil Navigation Paristamil advert login

EuroMillions : 250 மில்லியன் பரிசு!

EuroMillions : 250 மில்லியன் பரிசு!

11 ஆனி 2025 புதன் 09:21 | பார்வைகள் : 3032


 

நேற்று ஜூன் 10, செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் 250 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் சரியான இலக்கங்களைக் கணித்து எவரும் அத்தொகையை வெற்றிபெறவில்லை.

19, 36, 39, 40 மற்றும் 45 ஆகிய அதிஷ்ட்ட இலக்கங்களும், 5 மற்றும் 6 ஆகிய இலக்கங்கள் நட்சத்திர இலக்கங்களாகவும் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சரியான இலக்கங்களை தெரிவு செய்யவில்லை.

ஐந்து பேர் சைந்து இலக்கங்களை சரியாக தேர்ந்தெடுத்து 5.9 மில்லியன் யூரோக்கள் தொகையை வென்றனர்.  

250 மில்லியன் பணத்தை எவரும் வெற்றிகொள்ளவில்லை. அதை அடுத்து, வரும் ஜூன் 13, வெள்ளிக்கிழமை மீண்டும் அதே தொகை ஏலத்துக்கு விடப்பட உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்