14 மணி அறிக்கையின்படி நான்கு மாவட்டங்களுக்குகடும் புயல் எச்சரிக்கை!

11 ஆனி 2025 புதன் 14:53 | பார்வைகள் : 569
14 மணி அறிக்கையின்படி, தென்மேற்கு பிரான்சின் நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பநிலைக்கு பிறகு, பலத்த இடி மின்னலுடன் கூடிய புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்படும் மாவட்டங்கள்:
Gironde,
Landes
Lot-et-Garonne
Gers
இன்று பிற்பகல் 35°C க்கும் மேல் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மற்றும் இரவில் கடும் இடி, மழை, பனிமழை மற்றும் வலுவான காற்று வரும்
மின்னல் உடன் கடும் மழை பெய்யும்
அத்லாண்டிக் கரை பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
வெளியே செல்வதை தவிர்க்கவும்
நீர் அதிகம் அருந்தவும்
பாதுகாப்பான இடத்தில் தங்கவும்
என வானிலை மையம் 14h00 மணிக்கு எச்சரித்துள்ளது.