Paristamil Navigation Paristamil advert login

8 லட்சம் யூரோக்கள் பறிமுதல்: சகோதரர்கள் இருவர் கைது!!

8 லட்சம் யூரோக்கள் பறிமுதல்: சகோதரர்கள் இருவர் கைது!!

13 ஆனி 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 2182


Aubervilliersஇல் (Seine-Saint-Denis) உள்ள சீன துணிக்கடைகள் மத்தியில், பெரிய அளவிலான பணமோசடி வலைவலையைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. 

2023 முதல் செயல்பட்ட இந்த வலையமைப்பில், வணிகர்களிடமிருந்து வரி தவிர்த்து சேகரித்த பணத்தை  சீனாவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. 2024 மற்றும் 2025ல் நடத்தப்பட்ட சோதனைகளில், மொத்தமாக 8 லட்சம் யூரோ ரொக்கபணமும், மதிப்புமிக்க பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சமீபத்தில் கைது செய்யப்பட்ட சகோதர சகோதரி இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஒபர்வில்லியர்ஸ் பகுதியில் தொடரும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

சீன வணிகர்களுக்கு இது ஒரு முக்கியமான மையமாக இருந்தாலும், அதே சமயம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வரி மோசடிகளுடன் தொடர்புடைய பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கும் முக்கிய இடமாக உள்ளது. 

இவை அனைத்தும் நீண்டகாலமாக செயல்பட்ட வலையமைப்புகளின் ஒரு பகுதி என்பதையும், பிரான்ஸ் முழுவதும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்