Paristamil Navigation Paristamil advert login

Stop-travail.com மூலம் 42,000 பயனர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை விற்றவர் கைது!!

Stop-travail.com மூலம் 42,000 பயனர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை விற்றவர் கைது!!

13 ஆனி 2025 வெள்ளி 23:10 | பார்வைகள் : 1804


லாண்டைஸ் (Landais) பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் "Stop-travail.com" என்ற இணையதளத்தை உருவாக்கி, 42,000 பயனர்களுக்கு போலியான வேலைநிறுத்த சான்றிதழ்களை விற்றுள்ளார். 

இந்த தளம் 2024 ஏப்ரலிலிருந்து 2025 ஏப்ரல் வரை இயங்கியுள்ளது. பயனர்கள் தங்களது நோய்கள் மற்றும் அருகிலுள்ள மருத்துவரை தேர்வு செய்து, கையொப்பம் அல்லது QR குறியுடன் கூடிய போலி சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இதன் மூலம், குறித்த இளைஞன் சுமார் 2.5 லட்சம் யூரோக்களை வருமானமாக பெற்றுள்ளார்.

இந்த சந்தேக நபர், ஏற்கனவே காவல்துறையினர் மற்றும் நீதித்துறையில் மோசடி மற்றும் சாலை விதிமீறல் சம்பவங்களில் தொடர்புடையவர் என கூறப்பட்டுள்ளது. 

இந்த மோசடி வழக்கில் சந்தேகநபர் சமூக நல மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோத மருத்துவராக நடிப்பது மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக நவம்பரில் நீதிமன்ற விசாரணை நடக்கவுள்ளது. 

அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 750,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. விசாரணையில் 1.75 லட்சம் யூரோ வங்கிப்பணமும் மற்றும் 23,000 மதிப்புள்ள ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்