Paristamil Navigation Paristamil advert login

முதன்முறையாக நாய்களுக்கு இணைப்புகள் இல்லாமல் பூங்காவில் சுற்ற அனுமதி!

முதன்முறையாக நாய்களுக்கு இணைப்புகள் இல்லாமல் பூங்காவில் சுற்ற அனுமதி!

14 ஆனி 2025 சனி 12:55 | பார்வைகள் : 552


நாளை ஜூன் 15, ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை, parc Monceau (8ஆம் மாவட்டம்) இல் நாய்களை இணைப்புகள் (laisse) இன்றி ஓடி விளையாட அனுமதிக்கப்படுகின்றன.

«Agility Party»  எனும் பெயருடனான இந்த நவடிக்கை ஏற்பாட்டாளர்கள், 'நாய்களும் மனிதர்கள் போல் சுதந்திரமாக உலாவ வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

இது Monceau Dog Club மற்றும் மாநகராட்சி கூட்டாக நடத்தும் முயற்சி. இந்த புதிய நடவடிக்கை, பெரிய பூங்காக்களில் நாய்களிற்கான சுதந்திர மண்டலங்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதி


சட்ட மாற்றத்துக்கான சோதனை?

தற்போது, பாரிஸ் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பூங்காக்களில் நாய்களுக்கு அனுமதி இருந்தாலும், அவை அதற்கான கயிற்றில் இணைத்தே இருத்தல் வேண்டும்.

மீறினால்: 135€ அபராதம்.

பாரிஸ் நகரத்தில் மட்டும் 100,00010 நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


விலக்குகள்

இருந்தும் ஆபத்தான வகை நாய்கள்(Chiens catégorisés) அனுமதிக்கப்படவில்லை.

குழப்பம் விளைவிக்கும் அல்லது இளமையான நாய்களிற்கு:

முகக் கவசம் (museau) கட்டாயம்.

3 மீட்டர் தொலைவை மீளாத நீளமான இணைப்பு அவசியம்.

இது ஒரு முக்கியமான முன்னோடி நடவடிக்கை. நாய்களும் அவர்களது உரிமையாளர்களும் சுதந்திரமாக நகர வாழ்வை அனுபவிக்க புதிய வழி திறக்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்