புயல் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி!!

15 ஆனி 2025 ஞாயிறு 13:58 | பார்வைகள் : 1728
மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
ஐந்தாம் வட்டாரத்தில் இச்சம்பவம் ஜூன் 13, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அன்றைய நாளில் பலத்த புயல் பரிசை தாக்கியிருந்தது.
நண்பர்களுடன் Quai Saint-Bernard பகுதியில் நின்றிருக்கும் போது, மரம் ஒன்று முறிந்து விழுந்து, குறித்த பெண் படுகாயமடைந்திருந்தார்.
பின்னர் அவர் Créteil நகரில் உள்ள Henri-Mondor மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
உடனடியாக அவருக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டது. இருந்தபோதும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.