இளங்கலை பரீட்சை! - 725,000 தோற்றுகின்றனர்! - 8 வயது முதல்..!!

15 ஆனி 2025 ஞாயிறு 19:44 | பார்வைகள் : 800
நாளை, ஜூன் 16 ஆம் திகதி திகதி திங்கட்கிழமை பிரான்சில் இளங்கலை பரீட்சை (BAC) இடம்பெற உள்ளது. இந்த வருடம் 724,633 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இவர்களில் "baccalauréat général" பரீட்சைக்கு 387, 244 பேரும்,
"baccalauréat professionnel" பரீட்சைக்கு 190, 993 பேரும், "baccalauréat technologique" பரீட்சைக்காக 146,396 பேரும் பரீட்சை எழுதுகின்றனர்.
இம்முறை மிகவும் ஆச்சரியமாக, இளங்கலை பரீட்சையை 8 வயது சிறுமி ஒருவர் எழுத உள்ளதாக தேசிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
3,032 நிலையங்களில் பரீட்சை எழுத முடியும். பரீட்சை மையத்தை கண்காணிக்க 40,124 தேர்வாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைக்கு தோற்ற உள்ள அனைவரும் பரிஸ் தமிழ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.