Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல்

16 ஆனி 2025 திங்கள் 08:57 | பார்வைகள் : 479


ஈரானில் உள்ள உலகின் மிகப்பாரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல், ஈரானின் South Pars எரிவாயு வயலில் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல், உலக எரிசக்தி சந்தையையே உலுக்கி விடும் ஒரு பரிதாபமான கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளது.

இது உலகின் மிகப்பாரிய இயற்கை எரிவாயு வயலாகும். இத்தாக்குதல் மூலம் தினசரி 1.2 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

South Pars களம் ஈரான் மற்றும் காத்தாரால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இது ஈரானின் 66 சதவீத உள்நாட்டு எரிவாயு தேவையை பூர்த்தி செய்கிறது.

ஆனால், தற்போது ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உற்பத்தி பாதிப்பால், ஈரானில் மின்தடை, தொழிற்சாலை செயலிழப்பு போன்ற விளைவுகள் உருவாகியுள்ளது.

இந்த தாக்குதல், ஈரானின் இராணுவ மற்றும் அணு உள்கட்டமைப்புகளைவிட, ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் பொருளாதார உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் எடுத்துள்ள முதலாவது நடவடிக்கையாகும்.

இது ஏற்கனவே கடுமையான ஆற்றல் நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் Strait of Hormuz, Kharg Island போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் மார்க்கெட்டுகளையும் பாதிக்கக்கூடும்.

மொத்த உலக எரிசக்தி விலை ஏற்கனவே 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சிக்கல் தொடர்ந்தால், ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பகுதி நாடுகளில் எரிபொருள் விலை உயரும், அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்தில் புயலை உருவாக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்