கிரீன்லாந்து மீது அமெரிக்கா கைவைக்க முடியாது - மக்ரோன் வரலாற்று பயணத்தில் உறுதி!

16 ஆனி 2025 திங்கள் 04:00 | பார்வைகள் : 924
அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றும் எண்ணத்தை வெளியிட்டதையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தன்னுடைய வரலாற்று முக்கியத்துவமிக்க பயணத்தின் போது, இந்தத் தீவுக்கு 'ஐரோப்பிய ஒற்றுமையின் ஆதரவை' வெளிப்படுத்தினார்.
மக்ரோன் கிரீன்லாந்தில் காலடி வைத்தது முதல், பிரெஞ்சு தலைவராக, மற்றும் டிரம்பின் மிரட்டலுக்குப் பின் அங்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக உருவெடுத்துள்ளார். நான்கு மடங்கு பிரான்ஸை விட பெரியதும், 80 சதவீதம் பனியால் மூடப்பட்டதுமான இந்த தீவு, மிகவும் பெறுமதியான கனிமங்களுக்குப் பெயர் பெற்றது.
மக்ரோன் நுக் (Nuuk) நகரத்திற்கு வந்தபோது, பலர் கிரீன்லாந்து தேசியக் கொடியுடன் அவரை வரவேற்றனர்.
'இது ஒரு உண்மையான ஐரோப்பிய ஒற்றுமையின் சாட்சி,' என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் பாராட்டினார்.
முன்னதாக JD Vance (அமெரிக்க துணைத் தலைவர்) மார்ச் 28 அன்று வருகை தந்தபோது, அவருக்குத் தீவின் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவரை Pituffik என்ற அமெரிக்க ராணுவத் தளத்திற்குள் மட்டுமே வர அனுமதித்தனர். JD Vance , டென்மார்க் கிரீன்லாந்துக்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு வரம்புகளில் போதிய உதவியளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மக்ரோன், டிரம்பின் திட்டங்களை 'புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல' என விமர்சித்ததுடன், 'நாங்கள் இந்த தீவின் இறையாட்சிக்கு நிச்சயமாக ஆதரவளிக்கிறோம்,' எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்ரோன் ஒரு டென்மார்க் போர்க்கள கப்பலில் இருந்த துப்பாக்கிச் சிப்பாய்களை பார்வையிட்டார், பின்னர் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
ஆர்க்டிக் பகுதி, உலகப் பாதுகாப்பு மற்றும் புதிய கடல்துறை வழித்தடங்களுக்கான புதிய போட்டி மேடையாக மாறியுள்ளது. அதனை எதிர்கொள்ள, டென்மார்க் €2 பில்லியன் நிதியையும், நேட்டோ தனது விமானக் கட்டுப்பாட்டு மையத்தை நோர்வேவில் அமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்ரோனின் பயணம் ஒரு அரசியல், நிலவியல் மற்றும் பாதுகாப்பு பார்வையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.