Paristamil Navigation Paristamil advert login

ஆலு பராத்தா

ஆலு பராத்தா

16 ஆனி 2025 திங்கள் 12:54 | பார்வைகள் : 320


பராத்தா ஒரு இந்திய ரொட்டி வகையாகும். இவை காலை உணவாகவும், சிற்றுண்டி ஆகவும் அதிகம் உண்ணப்படுகிறது. பராத்தாவுடன் தயிர், பொரித்த முட்டை, ஆம்லெட், மட்டன் கீமா அல்லது ரைதா போன்ற சைட் டிஷ் பரிமாறப்படுகின்றன.

பராத்தாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் தயாரிக்கப்படுவது ஆலு பரோட்டா , கீரைகளுடன் தயாரிக்கப்படுவது கீர பரோட்டா, வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுவது வெங்காய பரோட்டா, கேரட் சேர்த்து தயாரிக்கப்படுவது அஜ்வைன் பரோட்டா என வகைப்படுத்தப்படுகிறது.

உலக அளவில் இடம்பிடித்த இந்திய உணவுகள்
காலை உணவு மற்றும் சிற்றுண்டியாக உண்ணப்படும் பரோட்டாவுடன் தயிர், பொறித்த முட்டை, ஆம்லெட், மட்டன் கீமா, ரைத்தா போன்ற உணவுகள் பரோட்டாவுடன் பரிமாறப்படுகிறது.

அதிகமான அளவில் பொதுமக்கள் பரோட்டாவை விரும்பி உட்கொள்வதால் இவை பிரபலமாகவே உள்ளது. விலை குறைவாக உள்ளதாலும் சுவை மிகுந்ததாகவும் இருப்பதால் பொதுமக்கள் பரோட்டாவை அதிகமாக விரும்புகின்றனர்.

முதலில் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து பொறிந்த பின் வெங்காம் சேர்த்து வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பின் சப்பாத்தி மாவை உருட்டி தேய்த்து தயார் செய்து வைத்த இந்த உருளைக் கிழங்கு மசாலாவை நடுவில் வைத்து சப்பாத்தியால் சுத்தி மடித்து கையால் அழுத்தி எடுத்து சூடான தோசைக்கல்லில் சப்பாத்தி போல போட்டு நன்கு இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்