Paristamil Navigation Paristamil advert login

BMW, Mercedes, Toyota மற்றும் Volkswagen நிறுவனங்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக புகார்!!

BMW, Mercedes, Toyota மற்றும் Volkswagen நிறுவனங்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக புகார்!!

16 ஆனி 2025 திங்கள் 22:31 | பார்வைகள் : 755


Takata நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏர்பேக்குகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெடித்து, இரும்புத் துண்டுகள் பறக்கும் அபாயம் உள்ளதாக UFC-Que Choisir நுகர்வோர் அமைப்பு கூறியுள்ளது. 

இதனைக் கண்டித்தும், BMW, Mercedes, Toyota மற்றும் Volkswagen ஆகிய கார் நிறுவனங்கள் மீது மோசடி மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. Takata ஏர்பேக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆபத்தானவை என்பது தெரிந்தும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், சில கார் நிறுவனங்கள் 2020 வரை கூட இந்த ஆபத்தான ஏர்பேக்குகளை  பயன்படுத்தியிருக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன. 

Citroën மற்றும் Stellantis மீது ஜனவரி மாதத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், மார்ச் மாதம் Guadeloupe-இல் ஒரு ஏர்பேக் வெடிப்பில் ஏற்பட்ட மரண விபத்தைக் குறிப்பிடும் UFC-Que Choisir, “இனி ஒவ்வொரு நிறுவனமும் தனது தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறது. 

UFC அமைப்பின் தலைவர் Marie-Amandine Stévenin, ஒவ்வொரு கார் நிறுவனமும் தங்களது பொறுப்பை ஏற்று விளக்கவேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு நாடாளுமன்ற குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்