ஈரான்-இஸ்ரேல் மோதல் - பாதுகாப்பு ஆலோசனை சபையைக் கூட்டும் மக்ரோன்!

18 ஆனி 2025 புதன் 04:00 | பார்வைகள் : 737
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், கனடா G7 மாநாட்டிலிருந்து திரும்பியவுடன் நாளை புதன்கிழமை எலிசே மாளிகையில் பாதுகாப்பு குழுவை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலுக்கான இரண்டாவது பாதுகாப்பு ஆலோசனை ஆகும்.
'எமது குடிமக்களின் பாதுகாப்பு, பிராந்தியத்தில் உள்ள பிரான்சின் தளங்கள் மற்றும் மோதலால் உருவாகும் புதிய அச்சுறுத்தல்களை பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தேவையானதாக இருப்பின், கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்,' எனவும் கூறினார்.
இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் இருந்து பிரான்ஸ் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்ற கவலையை ஒட்டியதாக பார்க்கப்படுகிறது.