ஓய்வூதிய பேச்சுவார்த்தை தோல்வி! - புதிய சந்திப்புக்கு ஏற்பாடு!!

18 ஆனி 2025 புதன் 09:31 | பார்வைகள் : 896
நேற்று ஜூன் 17, செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ‘ஓய்வூதிய பேச்சுவார்த்தை மாநாடு’ தோல்வியில் முடிந்ததுள்ளது. மூன்றரை மாத பிடுங்குப்பாட்டின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்று - தோல்வியில் முடிந்தது.
தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள், அரச தரப்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டவில்லை. புதிய சந்திப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய பிரதமர் Elisabeth Borne , ஓய்வூதியம் குறைக்கப்படுவதாக சட்டம் இயற்றினார். இதனைக் கண்டித்து பல நாட்கள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், நேற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து - வரும் ஜூன் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.