ஐரோப்பிய ஒன்றிய விசா விதிகளில் அதிரடி மாற்றம்... சிக்கவிருக்கும் இஸ்ரேலியர்கள்

19 ஆனி 2025 வியாழன் 05:33 | பார்வைகள் : 101
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா இல்லாத பயணங்களுக்கான விதிகளில் மாற்றம் கொண்டுவருவதில் பாதிக்கப்படும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கன் நாடுகளுக்கு குறுகிய கால விசா இல்லாத பயணம் தொடர்பான சீர்திருத்தத்திற்கு செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஆணையத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அப்படியான முடிவு இறுதி செய்யப்படும் என்றால் இலக்காகக் கொள்ளப்படும் முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாக இருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால விசா இல்லாத பயணங்களுக்கான திட்டத்தை ரத்து செய்வதற்கான காரணமாக மனித உரிமை மீறல்களையும் சேர்க்கப்படுகிறது.
இது இஸ்ரேல் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு கட்டாயமாக்கப்படும். தற்போது அவுஸ்திரேலியா, பிரேசில், இஸ்ரேல், ஜப்பான், பிரித்தானியா, உக்ரைன் மற்றும் மேற்கு பால்கன் நாடுகள் உட்பட 61 நாட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட 180 நாட்களில் 90 நாட்கள் வரையில் தங்க ஷெங்கன் பகுதிக்கு பயணம் செய்யலாம்.
ஆனால் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விசா இல்லாத பயணத் திட்டத்தை நிறுத்தி வைக்கலாம்.
இதுவரை வனுவாட்டு குடியரசு மக்களுக்கு மட்டுமே அப்படியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது புதிய ஒப்பந்தங்களின் கீழ் வரம்புகள் குறைக்கப்பட்டு புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசன மீறல்கள், சர்வதேச மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இணங்காதது ஆகியவை தற்போது ஒரு நாட்டின் விசா இல்லாத நிலையை நிறுத்தி வைப்பதற்கான செல்லுபடியாகும் காரணங்களாக இருக்கும்.
இது எந்த ஒரு நாட்டவர்களையும் குறிவைக்கும் திட்டமல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய நடைமுறையின் கீழ் அதன் அந்தஸ்து கேள்விக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள நாடுகளில் இஸ்ரேலும் இடம்பெற்றுள்ளது.
காஸா மீதான போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வால் முன்னிலைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் கவலைகள் காரணமாக, செர்பியாவும் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய நடைமுறையின் கீழ், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான விசா இல்லாத திட்டத்தை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதற்கான ஒரு செயல்படுத்தல் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் வெளியிட வேண்டும்.
இந்த முடிவுக்கு உறுப்பு நாடுகளின் ஒப்புதல் மட்டுமே தேவை, மேலும் தகுதிவாய்ந்த பெரும்பான்மையினரால் அதைத் தடுக்க முடியும். மேலும், சைப்ரஸ், அயர்லாந்து, ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் உள்ளடக்கிய ஷெங்கன் பகுதியில் உள்ள நாடுகளும் இந்த நடைமுறையைத் தொடங்க ஆணையத்தை வலியுறுத்தக்கூடும்.
அதாவது அந்தஸ்து ரத்து செய்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் நம்புவதாக அறிவிப்பதன் மூலம் துரிதப்படுத்தலாம். மட்டுமின்றி, ஒரு நாட்டின் விசா இல்லாத நிலையை நிறுத்தி வைப்பதற்கு பரிந்துரைக்கும் சட்டத்தால் முறியடிக்க முடியாத தீர்மானத்தையும் நாடாளுமன்றம் முன்மொழியலாம்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முறையிடலாம் என்றே தகவல் கசிந்துள்ளது.