இஸ்ரேலிற்கு நிபந்தனைகள் - வெளிவிகார அமைச்சரிற்கு ஆணை - எமானுவல் மக்ரோன்!

19 ஆனி 2025 வியாழன் 00:08 | பார்வைகள் : 596
பிரஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், புதன்கிழமையன்று ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கூட்டத்தில், மத்திய கிழக்கு நிலவரம் குறித்து கலந்துரையாடியபோது, 'ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டத்துடன் தொடர்பற்ற மற்றைய தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்
பிரான்ஸ், 'ஒரு கடுமையான பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வை முன்வைக்கும் முயற்சியை' எடுக்க உள்ளது.
ஜனாதிபதி மாக்ரோன், வெளிநாட்டு அமைச்சர் ஜோன்-நொயல் பரோவை, ஐரோப்பாவின் முக்கிய தவைர்களுடன் இணைந்து 'இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய, கடுமையான விவாதத்திற்குரிய தீர்வை முன்வைக்கும் ஒரு முயற்சியை அடுத்த சில நாட்களில் எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
பாதுகாப்பபுச் சபையின் போது, மக்ரோன், 'தற்போது இடம்பெறும் தாக்குதல்கள், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டத்துடன் சம்பந்தமில்லாத மற்றைய இலக்காக் கொண்டுள்ளதுடன், இரு நாடுகளிலும் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிக்கின்றது' என்று கவலை தெரிவித்தார்.
இத்துடன், இந்த நிலைமையை முடிவிற்குக் கொண்டுவர 'இவை போன்ற இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது அவசியம்' எனவும் கூறினார்.
மேலும், ஈரானிலோ அல்லது இஸ்ரேலிலோ உள்ள பிரஞ்சு குடிமக்களை தேவையெனில் அங்கிருந்து வெளியேறச் சாத்தியமுள்ள நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.