இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

19 ஆனி 2025 வியாழன் 11:39 | பார்வைகள் : 337
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்ரேலிய அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் துணை வெளியுறவு அமைச்சர் மருத்துவமனைக்கு உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணையே காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டினாலும், ஈரான் அரசு ஊடகங்கள், மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள IDF கட்டளை மற்றும் உளவுத்துறை தலைமையகமே தங்களது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளன.