இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய Sejjil-2 ஏவுகணை

20 ஆனி 2025 வெள்ளி 12:18 | பார்வைகள் : 372
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது சக்திவாய்ந்த செஜ்ஜில்-2 (Sejjil-2) ஏவுகணையை இஸ்ரேலுக்கு எதிராக முதல் முறையாக ஏவியுள்ளது.
இந்த ஏவுகணை குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை (IRGC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Sejjil-2 என்பது இரு நிலை (Two-stage), திட எரிபொருளால் இயங்கும், நீண்ட தூரம் செல்லக்கூடிய (long-range) ஏவுகணையாகும்.
இதன் தூர அளவு சுமார் 2,000 கிமீ என்றும், 700 கிலோ கிராம் வெடிமருந்து கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டதாகவும் CSIS தகவல்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2008-ல் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பழைய Shahab ஏவுகணைகளுக்கு மாறாக, திட எரிபொருள் பயன்பாட்டால் விரைவில் தயாரித்து ஏவ முடியும் என்ற தன்மை கொண்டது.
இஸ்ரேலின் IDF பாதுகாப்பு படைகள் இந்த ஏவுகணையை தடுப்பதில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏவுகணையின் சில துண்டுகள் ஒரு வாகனத்திற்கு சிறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Sejjil-2 ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• நீளம்: சுமார் 18 மீட்டர்
• எடை: சுமார் 23,600 கிலோ
• பயன்பாடு: முக்கிய அணு நிலையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை தாக்கக் கூடியது
• கடைசி பரிசோதனை: சுமார் 1,900 கிமீ தூரம் இந்திய பெருங்கடலில் பறந்தது
இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன, எனும் எச்சரிக்கைகளை பாதுகாப்பு வல்லுநர்கள் வெளியிட்டு வருகின்றனர்.