இருபது நபர்களால் முக்காடு அணிந்த பெண் தாக்கப்பட்டார்!!

20 ஆனி 2025 வெள்ளி 16:19 | பார்வைகள் : 548
Reims உள்ள Croix-Rouge பகுதியில் முகமூடி அணிந்த இளம் பெண் ஒருவரை வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் சுமார் இருபது பேர் தாக்கியுள்ளனர்.
இருபது வயதுடைய இளம் பெண்ணிடம் வீதியில் நடந்து சென்றபோது, கேள்வி கேட்டு இவர்களில் ஒருவர் முக்காடை அகற்றுமாறு கூறியுள்ளார். அவர் மறுத்ததும், அவரது முக்காடை கிழித்து, முகத்தில் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அந்த பெண்ணுக்கு மூக்கு மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்துக்கான காரணம் அவர் முக்காடு அணிந்திருந்ததுதான் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.