Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் கருத்தைப் பிரதிபலிக்கும் வெளிவிவகார அமைச்சர்!

மக்ரோன் கருத்தைப் பிரதிபலிக்கும் வெளிவிவகார அமைச்சர்!

21 ஆனி 2025 சனி 03:18 | பார்வைகள் : 253


பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நொயல் பாரோ (Jean-Noël Barrot), இஸ்ரேல் - ஈரான் இடையிலான பிரச்சனை தொடர்பாக 'தாக்குதல் அல்ல,பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே வழி' எனத் தெரிவித்துள்ளார்.

அவர் 'நாங்கள் ஐரோப்பியர்கள், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம், நிலைமையைத் தணித்து அமைதி ஏற்படுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். எமானுவல் மக்ரோன் இதே கருத்தை வெள்ளிக்கிழமை லூ-பூர்ஜே விமானத் தளத்தில் ஊடகங்களிற்குத் தெரிவித்திருந்தார்.

இந்த ஆணையை ஏற்று ஜோன்-நொயல் பாரோ, தற்போது ஜெனீவாவில் உள்ளார்.

அங்கு அவர், பிரிட்டன், ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர்களுடள் இணைந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அரக்சியை சந்தித்து உள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்