Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : €334 மில்லியன் பெறுமதியான சேதத்தை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழை!!

பரிஸ் : €334 மில்லியன் பெறுமதியான சேதத்தை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழை!!

27 வைகாசி 2025 செவ்வாய் 23:49 | பார்வைகள் : 1696


பரிசில் கடந்த மே 3 ஆம் திகதி பாரிய சத்தத்துடன் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்திருந்தது. கோல்ஃப் பந்தின் அளவில் எல்லாம் ஆலங்கட்டி கொட்டியிருந்ததாக பரிஸ் மக்கள் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அன்றைய ஒரு நாளில் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக €334 மில்லியன் யூரோக்கள் காப்புறுதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் €196 மில்லியன் யூரோக்கள் தொகை வாகன உரிமையாளர்களால் கோரப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழை ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தியுள்ளன.

€116.9 மில்லியன் யூரோக்கள் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளன. €14 மில்லியன் விவசாய சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஆலங்கட்டி மழை ஆறுமாதத்துகாக வாகன காப்புறுதி பெறுமதியை ஒரே நாளில் ஏற்படுத்தியுள்ளதாக காப்புறுதி நிறுவனங்களின் கூட்டு அதிகார சபை அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்