சிவகார்த்திகேயனின் 'மதராஸி' பட கதை இதுதானா?

28 வைகாசி 2025 புதன் 13:09 | பார்வைகள் : 1154
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் ‘மதராஸி’ திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
‘பராசக்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. அதேசமயம் ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிக்கட்ட காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டுள்ளனர். இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளது.
‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5 2025-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால், ருக்மணி வசந்த், விக்ராந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சுதீப் எலாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் கப்பலில் சண்டை நடப்பது போலவும், சிவகார்த்திகேயன் எதிரிகளை அடித்து துவைப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது துறைமுகத்தில் நடக்கும் கடத்தல் திரில்லர் படமாக இது இருக்கக் கூடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயன் கப்பலில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி போல உடை அணிந்து இருப்பது இதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பிஜூ மேனன், விக்ராந்த் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாகவும், வித்யூத் ஜம்வால், சபீர் கடத்தலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்ககூடும் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.