PSG விளாசும் ஒவ்வொரு கோலுக்கும் - ஈபிள் கோபுரம் ஒளிர உள்ளது!!

28 வைகாசி 2025 புதன் 20:37 | பார்வைகள் : 2050
PSG-Inter Milan அணிகளுக்கிடையிலான சாம்பியன் லீக் இறுதிப்போட்டி வரும் ஜூன் 1 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இடம்பெற உள்ளது. போட்டியின் போது PSG கழகம் விளாசும் ஒவ்வொரு கோலுக்கும் ஈபிள் கோபுரம் ஒளிர உள்ளது.
பரிஸ் நகரசபை இதனை இன்று புதன்கிழமை சுட்டிக்காட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின்ற போதும், இரவு 8 மணி முதல் அது நீலம் மற்றும் சிவப்பு (PSG அணியைக் குறிக்கும் வண்ணம்) நிறங்களில் ஜொலிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூட, Champs-Élysées வீதியில் இந்த போட்டி இராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.