110 பெட்டி சிகரெட்டுக்களுடன் விமானநிலையமூடாக பயணித்த - பெண் செனட்சபை அங்கத்தவர் !!

29 வைகாசி 2025 வியாழன் 10:48 | பார்வைகள் : 1503
செனட் சபையின் உறுப்பினரான Annick Petrus, சாள்-து-கோல் விமானநிலையத்தின் சுங்கவரித்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் பயணிக்கும் போது, அவரது பயணப்பெட்டியுடன் அவரது முகவரி பொதித்த 110 பெட்டி சிகரெட் கொண்டு சென்றதாகவும், அவற்று அனுமதி வாங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 4 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள போதும், இது தொடர்பான செய்திகள் தற்போதே வெளியாகியுள்ளன. Saint-Martin மாவட்டத்துக்காக குறித்த செனட் சபை உறுப்பினரான அவரிடம், இது தொடர்பான நீதிமன்றம் வினாவியபோது, “நான் தவறிழைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவரது பயணப்பெட்டியில் சிகரெட் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை” எனவும் பதிலளித்துள்ளார்.
அதை அடுத்து அவருக்கு 4,900 யூரோக்கள் குற்றப்பயணம் அறவிடப்பட்டு, சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர் கொண்டுசென்ற சிகரெட் பெட்டிகளின் மதிப்பு 14,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.