நீண்டகால வறட்சியை நோக்கி இல்-து-பிரான்ஸ்..?!

30 வைகாசி 2025 வெள்ளி 07:27 | பார்வைகள் : 1518
இல் து பிரான்ஸ் மாகாணத்தின் சில பகுதிகள் நீண்டகால வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளை 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதிகரித்து வரும் அதிக வெப்ப நிலையால், மண் நீர் மிக வேகமாக ஆவியாகி வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்துக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், 2050 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் 45% சதவீதம் கீழே செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது வம் சராசரியாக 2°C இனால் அதிகரித்துள்ளது.
2100 ஆம் ஆண்டு அளவில் இல் து பிரான்சுக்குள் விவசாயத் துறையில் 2.5 பில்லியன் யூரோக்கள் நஷ்ட்டத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியையும், தகவல்களையும் OECD எனும் நிறுவனம் (ஆங்கிலத்தில் Organisation for Economic Co-operation and Development ) வெளியிட்டுள்ளது.