Paristamil Navigation Paristamil advert login

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

31 வைகாசி 2025 சனி 06:31 | பார்வைகள் : 432


நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் குவித்து அபாரமான அடித்தளத்தை அமைத்தனர்.

மாற்று வீரராக இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய பேர்ஸ்டோ, வெறும் 22 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். திலக் வர்மா 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னில் வெளியேற, சாய் சுதர்ஷன் தனி ஆளாக நின்று போராடினார். அவர் 49 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 24 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து நம்பிக்கையளித்தார்.

எனினும், கடைசி நேரத்தில் ருதர்ஃபோர்ட் 24, டிவாடியா 16, ஷாருக் கான் 13 என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்கள் மட்டுமே குவித்ததால் இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்