Paristamil Navigation Paristamil advert login

சீனாவை தடுக்க அமெரிக்க திட்டம் - தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கும் ட்ரம்ப்

சீனாவை தடுக்க அமெரிக்க திட்டம் - தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கும் ட்ரம்ப்

31 வைகாசி 2025 சனி 09:52 | பார்வைகள் : 1843


சீனாவிற்கு எதிராக தைவானுக்கு ஆயுத விற்பனையை ட்ரம்ப் அதிகரிக்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட அதிக அளவில் ஆயுதங்களை தைவானுக்கு விற்க திட்டமிட்டுள்ளார்.

இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததின்படி, சீனாவின் இராணுவ அழுத்தத்துக்கு எதிராக தைவானை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த விற்பனைகள் நடைபெறவிருக்கின்றன.

முந்தைய ட்ரம்ப் நிர்வாகம் $18.3 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்றது. இதுவே பைடன் நிர்வாகத்தில் $8.4 பில்லியனாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து, புதிய ட்ரம்ப் நிர்வாகம் தைவானுக்கு அதிக ஆதரவு அளிக்கப்போகிறது என்பது உறுதியாகிறது.

அமெரிக்கா, தைவானின் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க ஒத்துழைக்கிறது. தைவானின் ஜனாதிபதி லாய் சிங்-டே தலைமையிலான அரசு, பாதுகாப்பு செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 3 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தைவானுக்கு வழங்கப்படும் புதிய ஆயுதங்களில், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தாக்குதலை தடுக்க இது முக்கியத்துவம் வாய்ந்தது.

சீனா, தைவானை தன் பகுதியாகக் கருதி, ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் தைவான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என தெரிவிக்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்