PSG வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சாவு!

1 ஆனி 2025 ஞாயிறு 11:36 | பார்வைகள் : 1842
பரிஸின் 15வது வட்டாரத்தில் ஒரு இளைஞர் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மோதி, 2025 மே 31 சனிக்கிழமை உயிரிழந்தார். PSG அணி லீக் வெற்றிப் போட்டியில் (Ligue des Champions) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த விழாக்களுக்கிடையே நிகழ்ந்த இரண்டாவது மரணம் இது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மற்றொரு சம்பவத்தில், 17 வயது இளைஞர் ஒரு கொண்டாட்டத்தின்போது நடந்த கத்திக்குத்தில் வாடகை மகிழுநதில் (Taxi) ஏறிய நிலையில் (Dax- Landes மாவட்டம்) உயிரிழந்தார். இந்த விழா PSG அணியின் Inter Milan மீதான வெற்றியை கொண்டாடுவதை முன்னிட்டு நடைபெற்றது.
வெற்றி விழாக்களில் இப்போதைக்கு இரண்டு சாவுகள் பதிவாகி உள்ளன. இன்னமும் என்ன துயரச் சம்பவங்கள் நிகழப் போகின்றனவோ தெரியவில்லை!