Paristamil Navigation Paristamil advert login

தாய்வானை உக்ரைனுடன் ஒப்பிடுவது ஏற்க முடியாதது: மக்ரோனுக்கு பதிலளித்த சீனா!

தாய்வானை உக்ரைனுடன் ஒப்பிடுவது ஏற்க முடியாதது: மக்ரோனுக்கு பதிலளித்த சீனா!

1 ஆனி 2025 ஞாயிறு 16:09 | பார்வைகள் : 1330


சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La Dialogue பாதுகாப்பு மாநாட்டில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தாய்வானை சீனா ஆக்கிரமிக்கலாம் என்ற சூழ்நிலையை உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். 

இது குறித்து சீனா மே 31, சனிக்கிழமை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தாய்வான் மற்றும் உக்ரைன் பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், அவற்றை ஒப்பிடுவது ஏற்க முடியாதது என சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ளது.

இம்மானுவேல் மக்ரோன், "நாட்டோ” (NATO) அமைப்பு ஆசியாவில் தலையிட வேண்டாம் என சீனா விரும்புகின்றதென்றால், சீனா வட கொரியாவை ஐரோப்பாவில் இருந்து விலக்க வேண்டும்," என்றும் எச்சரித்துள்ளார். 

வட கொரியா தற்போது ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனில் சிப்பாய்களை அனுப்பியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக, சீன தூதரகம், "தாய்வான் என்பது சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதி; இது ஒரு உள்நாட்டு விவகாரம்," என்று வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்