சோம்ப்ஸ்-எலிசே மற்றும் சுற்றுவட்ட வீதிகளில் 79 பேர் கைது!!

2 ஆனி 2025 திங்கள் 09:10 | பார்வைகள் : 2378
நேற்று ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுற்றுவட்ட வீதி (périphérique) மற்றும் சோம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) பகுதிகளில் பலத்த வன்முறை இடம்பெற்றதை அடுத்து, 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
PSG அணியின் வெற்றிக்கொண்டாட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. நேற்று இரவு மீண்டும் பல இடங்களில் ரசிகள் வன்முறையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணி வரை பல இடங்களில் வன்முறை இடம்பெற்றுள்ளன.
காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதன் முடிவில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஜூன் 1, சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறையில், 500 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்க்ளில் 323 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இரண்டாவது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.