ஒருசில மணிநேரங்களில் 19,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு,.. வீடுகள் சேதம்!

2 ஆனி 2025 திங்கள் 17:00 | பார்வைகள் : 1812
ஞாயிற்றுக்கிழமைக்கும் - திங்கட்கிழமைக்கும் உட்பட்ட இரவில் நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழையும் கொட்டித்தீர்த்திருந்தது. பல நூறு வீடுகள் சேதமாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒருசில மணிநேரங்களுக்குள்ளாக 19,000 இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக Ain, Ardèche, Doubs, Drôme, Isère, Jura, Loire, Haute-Loire, Rhône மற்றும் Saône-et-Loire ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
’எட்டு செ.மீ’ அளவுடைய ஆலங்கட்டி மழை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காற்றும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசியதாகவும், பல வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளன.