Paristamil Navigation Paristamil advert login

வீதிக் கொலைக் குற்றம் தொடர்பான சட்ட முன்மொழிவு!

வீதிக் கொலைக் குற்றம் தொடர்பான சட்ட முன்மொழிவு!

3 ஆனி 2025 செவ்வாய் 21:08 | பார்வைகள் : 813


இன்று செவ்வாய்க்கிழமை, 'வீதிக் கொலை' (délit d’homicide routier) எனும் தனிப்பட்ட குற்றத்தை உருவாக்கும் நோக்கில் செய்யப்பட்ட சட்ட முன்மொழிவு, இரண்டாவது முறையாக தேசிய சட்டமன்றத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இந்த கருத்தை, ஆல்ப்-மாரிதிம் பகுதியைச் சேர்ந்த லே ரெப்புப்ளிகன் (LR)கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரிக் போஜெ கொண்டு வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவரது தொகுதியில் 16 வயதுடைய நோயே என்ற இளைஞர், மதுபானம் குடித்ததும் போதைப் பொருள் உடகொண்டும் மிக வேகமாகவும் வாகனத்தைச் செலுத்தி, ஒருவர் மதீது மோதி அவர் உயிரிழந்ததை அடுத்தே இது அவரது முக்கியக் கோரிக்கையாக மாறியுள்ளது. குற்றவாளி 'தற்செயலான கொலை'க்காக தீர்ப்பளிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர், குற்றவியல் சட்டத்தில் உள்ள வரம்புகளை மாற்ற விரும்புகிறார். தற்போது அதில் உள்ள இரண்டு வகைகள் மட்டுமே – உத்தேச கொலை மற்றும் தற்செயலான கொலை – என்பவற்றைக் கடந்து புதிய குற்றவகையாக வீதிக் கொலை எனும் தண்டனைப் பிரிவை உருவாக்க முன்மொழிகின்றார்.

இந்த 'வீதிக் கொலை' குற்றம், ஜனவரி 2024 இல் முதலாவது வாசிப்பில் தனித்துவமான குற்றமாக முன்மொழியப்பட்டது.

போதைப்பொருள் மற்றும், அல்லது மனநிலை மாற்றும் மருந்துகளின் பயன்பாடு

உரிய வாகனச் சாரதி உரிமம் இல்லாமை

வேகக்கட்டுப்பாட்டை மணிக்கு 30 கிலோமீற்றரிற்கு அதிகமாக மீறுதல்

வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பயன்படுத்தல்

காவற்துறையினரின் கட்டளைக்கு கீழ்ப்படாமை

வீதிக் குற்றம் செய்து விட்டுத் தப்பிச் செல்லல்

நகர்ப்புற ரோடீயோ (அதிவேக, ஆபத்தான ஒற்றைச்சில் ஓட்டம்)

என்பன முன்மொழியப்பட்டுள்ளன.

ஒரு சாரதி மேற்கண்ட குற்றங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொண்டிருந்தால், தற்போதைய சட்டத்தின்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100,000 யூரோ அபராதம் விதிக்கப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான குற்றங்கள் இருந்தால், இது 10 ஆண்டு சிறை தண்டனையாகவும், 150,000 யூரோ அபராதமாகவும் உயர்த்தப்படும்.

தேசிய வீதிப் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் (ONISR - Observatoire national interministériel de la sécurité routière) படி, விபத்துகளில் மூன்றில் இரண்டு, குறைந்ததுள்ளன. 2013-2017 இற்கிடையிலான ஆய்வின் படி, உயிரிழப்புக்கு காரணமான விபத்துகளில் 35 சதவீதம் மதுபானம் தொடர்புடையவை, 30 சதவீதம் வேகத்துக்கு காரணமானவை, மற்றும் 18 சதவீதம் போதைப்பொருளால் ஏற்பட்டவை.

2024 ஆம் ஆண்டில், பிரான்சில் 3,190 பேர் சாலைகளில் உயிரிழந்துள்ளனர் மற்றும் 233,000 பேர் காயமடைந்துள்ளனர், இதில் சுமார் 16,000 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்