வன்முறையின் அளவிற்குத் தண்டனைகள் இல்லை - நீதியமைச்சர்!

3 ஆனி 2025 செவ்வாய் 22:08 | பார்வைகள் : 2572
«நாட்டில் நடந்த வன்முறையின் அளவுக்கு ஏற்ற தண்டனைகள் இல்லை» என PSG வெற்றிக்குப் பிந்தைய சமயத்தில் பரபரப்பான தீர்ப்புகளை நீதி அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் விமர்சனம் செய்துள்ளார்.
PSG யின் சாம்பியன்ஸ் லீக் வெற்றியை ஒட்டி ஏற்பட்ட மோதல்களுக்குப் பின், முதல் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தவுடன், நீதி அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் «நாட்டில் உள்ள வன்முறையின் அளவுக்கு இப்போதைய தண்டனைகள் ஏற்புடையதல்ல» எனம் விமர்சித்துள்ளார்.
«இந்த வார இறுதியில் நிகழ்ந்த வன்முறைகள், குழப்பங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட சமூக ஒழுங்குக் குலைவுகளுக்குப் பின்னர், குறிப்பாக சட்டம் ஒழுண்கு மீறல்கள், மற்றும் சொத்து அழிப்புகளிற்காகவும் வழங்கப்பட்ட சில தண்டனைகள், இந்நாட்டில் நிகழும் வன்முறையின் நிலைக்கு முறையான தண்டனைகள் இல்லை» என அவர் X இல் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்
தனது செய்தியிலேயே முன்னாள் உள்துறை அமைச்சரும் இந்நாள் நீதி அமைச்சருமான ஜெரால்ட் தர்மனன் «கடுமையான தண்டனை அளவுகோலுடன் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அரசுத் தலைமைக்குரிய நபர்களை தாக்குவோருக்கு நேரடி சிறைத் தண்டனை வழங்கப்படல் வேண்டும்» எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
«நான் முன்னரே பொது வெளியில் தெரிவித்தது போல, சட்டத்தில் ஒரு அடிப்படை மாற்றம் தேவை. கட்டாய தண்டனை சலுகைகளை நீக்க வேண்டும், ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகளை நீக்க வேண்டும், குற்றவாளி உறுதி செய்யப்பட்ட பிறகு கட்டாயமாக குறைந்தபட்ச தண்டனை ஒன்றை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்»
«உதாரணமாக, ஒரு அரசுப் பிரதிநிதிக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் குறைந்தது 3 மாதங்கள் நேரடி சிறைத் தண்டனை வழங்க வேண்டும். அதேபோல், சொத்து அழிப்புகளுக்கு மிகவும் உயர்ந்த அபராதம் அறவிட வேண்டும்»
«இந்த விதிமுறைகள், நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மக்களால் எதிர்பார்க்கப்படும் கடுமையும் நியாயத்தை நிலைநிறுத்தவும் உதவி செய்யும்»
எனவும்அவர் வலியுறுத்தினார்.
PSG வெற்றிக்குப் பிந்தைய விழாக்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் 642 பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டனர், இதில் 491 பேர் பாரிஸில் மட்டுமே கைது செய்யப்பட்டனர். (இதில் 79 பேர் ஞாயிறு இரவு முதல் திங்கள் காலை வரையான காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.