Paristamil Navigation Paristamil advert login

€250 மில்லியன் பரிசுக்குவியலோடு - சீட்டிழுப்பு!!

€250 மில்லியன் பரிசுக்குவியலோடு - சீட்டிழுப்பு!!

4 ஆனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 2557


வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 6 ஆம் திகதி €250 மில்லியன் யூரோக்கள் பணப்பரிசு வெல்லக்கூடிய EuroMillions சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை 237 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய சீட்டிழுப்பு இடம்பெற்றது. அந்த தொகை எவராலும் வெல்லப்படவில்லை.  12, 15, 38, 47, 48, ஆகிய ஐந்து அதிஷ்ட்ட இலக்கங்களும்,  5 மற்றும்  7 ஆகிய நட்சத்திர இலக்கங்களும் வெற்றி இலக்கங்களாக பெறப்பட்டது. ஆனால் அதனை எவரும் கணித்திருக்கவில்லை.

இந்நிலையில், தற்போது 13 மில்லியன் யூரோக்கள் மேலதிகமாக இணைக்கப்பட்டு, 250 மில்லியன் தொகையில் சீட்டிழுப்பு வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற உள்ளது. 

********

அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு ஒரு சூதாட்டமாகும். இதில் பண இழப்பு அபாயங்கள் உள்ளன. உளநல சிகிச்சைகளுக்கும், மேலதிக தகவல்களுக்கும் 09 74 75 13 13  எனும் இலக்கத்தில் அழைக்கவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்