வானிலை : 9 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

4 ஆனி 2025 புதன் 09:45 | பார்வைகள் : 2345
இன்று ஜூன் 4 ஆம் திகதி, புதன்கிழமை நாட்டின் தென் கிழக்கு பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Drôme, Ardèche, Isère , Savoie, Haute-Savoie, Ain, Loire, Haute-Loire மற்றும் Rhône ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் வரை மிதமான வெப்பம் நிலவும் எனவும், மாலை 4 மணி முதல் அங்கு இடிமின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு இரவு 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.